ரத்த ஓட்டப் பாதை எல்லாம்
சத்தம் போட வைச்சவளே..
கண்ணு முழிக்குள்ளார
கனவ வைச்சு தைச்சவளே..
ஒத்த இதயத்த தகர்க்கிறியே
வெடிகுண்டுக் கண்ணால..
மூச்சுக் காத்து போகும் இடமெல்லாம்
சாத்திக்கிச்சே உன்னால..
ஒடம்பு துடிக்க ஒரசி நின்னு
உச்சி முடி சிலுக்க வைப்ப..
சட்டுன்னுதான் தள்ளிப்போயி
சத்தியமா துடிக்க வைப்ப..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி என்ன
சொட்டுச் சொட்டா நனைய வைப்ப..
கோபத்தோட ஏசி என்ன
கொத்துத் தீயா எரிய வைப்ப..
நீ நல்லப் பிள்ளையா.. – இல்ல
செல்லத் தொல்லையா…